- பெருநகர போக்குவரத்துக் கழகம்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- நகராட்சி போக்குவரத்து கழகம்
- போக்குவரத்து அமைச்சர்
சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார குளிர்சாதன தாழ்தள பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நவீன வடிவமைப்புடன் கூடிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி தமிழகத்தில் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன், கடந்த ஆண்டு 500 மின்சார பஸ்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார பேருந்துகள் வழங்கும் நிறுவனம், சார்ஜிங் மையம், சர்வீஸ் மையத்தை அமைத்து தரவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறுவதற்கு தகுதியான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மின்சார பேருந்துகள் குளிர்சாதன வசதியுடன், தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்படவுள்ளது.
The post மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார குளிர்சாதன பேருந்துகள் கொள்முதல்: தமிழ்நாடு அரசு டெண்டர் appeared first on Dinakaran.